mathan |
12:37 PM |
0
comments
கதை சுருக்கம்
பொதுவாக மன்னராட்சி காலத்தில் ஒரே பெயரையே எல்லா வாரிசுகளுக்கும் வைத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பெயருடன் ஒரு நம்பரை மட்டும் இணைத்துவிடுவார்கள். (நம்ம இம்சை அரசன் 23ம் புலிகேசி போல). அதுபோல நமது கிளியோபாட்ரா வம்சத்தில் ஏற்கனவே ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்ததினால் இவருக்கு ஏழாம் கிளியோபாட்ரா என்று பெயர். கிளியோபாட்ரா குடும்பத்தில் ஆண்களாக பிறந்தாலே ப்ளாடெமி என்றும் பெண்களாக பிறந்தாலே கிளியோபாட்ரா என்றும் பெயர் வைத்துவிடுவார்களாம். நம்பர் மட்டும்தான் வேற வேற. எகிப்து நாட்டில் கி.மு 69ம் ஆண்டில் பிறந்த இவரது முழு பெயர் Cleopatra VII Philapator (சத்தியமா தமிழ்ல டைப் பண்ண முடியல).
அறிவாற்றலும் பேரழகும் கொண்ட கிளிக்கு (இனிமே இப்படியே எழுதுறேன்... ஒவ்வொரு முறையும் கிளியோபாட்ரான்னு டைப் பண்ண கை வலிக்குது) ஒன்பது மொழிகள் தெரியுமாம். (தமிழ் தெரிந்தால் வந்து பின்னூட்டம் போடச் சொல்லலாம்). கிளி ஒரு கணித மேதை. கணக்கு பண்ணுவதிலும்தான் என்பதை பதிவின் பின்பாதியை படிக்கும்போது உணருவீர்கள். கிளியின் டாடி சீக்கிரமே இறந்துவிட்டதால், அப்போது பதினெட்டு வயதே ஆகியிருந்த கிளியும் அவரது பதினைந்து வயது தம்பியும் சேர்ந்து ஆட்சிப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் சிலகாலத்தில் அவரது தம்பி துரோகி ஆகி கிளியை கவிழ்த்துவிட்டார்.
இங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. ரோமப் பேரரசு (பேரரசுன்னு சொன்னதும் யாரும் பயப்படாதீங்க மக்கள்ஸ்... இவரு டைரக்டரு இல்ல) ஜூலியஸ் சீசர் உதவியுடன் போரில் வெற்றிப்பெற்று மீண்டும் எகிப்து ராணியாகிவிட்டார். ஆனால் எகிப்து நாட்டின் சட்டப்படி தனியாக ஆள முடியாததால் தனது பதினோரு வயது தம்பியை மணந்துக்கொண்டார். (பாலச்சந்தர் பட க்ளைமாக்ஸ் மாதிரி இருக்கே...) ஆயினும் தலைவனை பிரிந்து தலைவிக்கு இருக்க முடியாததால் மீண்டும் ரோமுக்கு சென்று ஜூலியஸ் சீசருடன் வாழ ஆரம்பித்தார். அவர்களுக்கு சிசேரியன் என்று ஒரு மகன் பிறந்தார். (சிசேரியனா நார்மல் டெலிவரியா என்று ஆராய்ந்து பார்த்தேன்... வரலாற்றுக்குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை). சில ஆண்டுகளில் ஜூலியஸ் மரணத்தை தழுவினார்.
ஜூலியஸின் மரணத்திற்குப்பின் அவரது ஆதரவாளரான மார்க் ஆண்டனி கிளியின் மீது காதலில் விழுந்தார். கிளியும் மார்க்குக்கு பாஸ்மார்க் போட, இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவரும் இணைந்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் உறவை மையப்படுத்தி ஷேக்ஸ்பியர் பதினேழாம் நூற்றாண்டில் நாடகம் ஒன்றினை நடத்தினார். போரில் ஆண்டனி மரணமடிய அதன்பிறகு கிளிக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷப்பாம்புகளை தனது மார்பில் கடிக்கவிட்டு கிளியோபாட்ரா தனது 39வது வயதில் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு சொல்கிறது.
கிளியோபாட்ராவின் வரலாற்றை அவ்வப்போது திரைப்படமாக எடுத்தபோதிலும் 1963ம் ஆண்டில் எலிசபெத் டெய்லர் நடிப்பில் வெளிவந்த படமே இன்றளவும் பேசப்படுகிறது. நான்கு ஆஸ்கர் அவார்டுகளை வாங்கி குவித்துள்ளது. கிளியோபாட்ரா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் இந்தப் படத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள்.
Direct Link's:
இரண்டு விதமான இணைப்புகளிலும் ஆங்கில சப் டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
ENGLISH MOVIE,
OSCAR NOMiNATiONS MOVIES,
THIRAI VIMARSANAM
0 comments