mathan |
4:49 PM |
0
comments
உத்தமபுத்திரன் - திரைவிமர்சனம்
சில திரைப்படங்களை அந்த அந்த பாணியில் வைத்து விமர்சிப்பதே நல்லது . அந்த வகையில் உத்தமபுத்திரன் ஒரு பொருளாதார (கமெர்ஷியல்) பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த குடும்ப படம் . அந்த இலக்கை தெலுங்குப்பட ரீமேக்குகளே முழுமையாக நிவர்த்தி செய்கின்றன என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது .
பெரிதாக அடிதடியும் ஆக்ரோஷமான அதட்டல்களும் இல்லாத பொழுதுபோக்கு படம் .சில சாதாரண குடும்ப(கொஞ்சம் பெரிய குடும்பம் ) பின்னணிகளை வைத்து நகைச்சுவை என்ற உணர்வு கலந்து திரைக்கதையை ஓடியிருக்கிறார் இயக்குனர் .
ஆரம்பத்தில் சிறப்பு விருந்தினர் ஸ்ரேயாவுடன் ஆரம்பிக்கிறது படம் .பாக்கியராஜ் ,ரேகா ,அம்பிகா என பல கௌரவ பாத்திரங்கள் பலவற்றுடன் பாத்திரங்கள் நீண்டு செல்கிறது . ஆனாலும் சாதரணமான தனுஷின் நடிப்பும் , ஜெனிலியாவின் புதிய அழகும் சிறப்பு .
தனுஷும் நண்பர்களும் தவறுதலாக வேறு மண்டபத்தில் இருந்து ஜெனிலியாவை மாற்றி தூக்கிக்கொண்டு வர , தனுஷுக்கு ஜெனிலியா மீது காதல் வர , ஜெனிலியாவின் ஒரு குடும்பமே (வில்லத்தனமான கூட்டம் ) இருவரையும் துரத்த , குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்க தனுஷ் என்ன என்ன செய்கிறார்,அவருடன் பயணிக்கும் பாத்திரங்கள் போன்றவற்றை கற்பனையில் கற்பனையாக அமைத்திருப்பார் இயக்குனர் .
சலித்த கருவாக இருந்தாலும் இதில் அமைத்திருக்கும் பாத்திரப்படைப்புகள் சில சிந்தனைகள் சிறப்பு .
எவளவோ கதைகள் வெளியில் தேடி அலையும் போது குடும்பத்திற்குள் இருந்தே பலர் மறந்த சில நிகழ்வுகளை உருவி எடுத்துள்ளனர் . என்ன தான் சொன்னாலும் குடும்பத்தில் பெண்களை பலர் சில முக்கிய முடிவுகளோ அல்லது அவர்கள் உணர்வுகளை திரும்பிக்கூட பார்ப்பதோ அல்ல . அதை இந்த திரைப்படம் தொட்டுச்செல்கிறது. இதில் உள்ள சில நச் வசனங்கள் .
"பொண்ணுங்க எப்பவும் குடும்பத்திலை சின்ன வட்டத்துக்குள்ள வாழ்ந்தவங்க . அப்பா , கணவன் ,பிள்ளைகள், நாம தான் அவங்களுக்கு உலகம் "
"ஒரு நல்ல பொண்ணு வயித்திலை பொறந்தவன் இன்னொரு பொண்ணை கேவலமா நடத்தமாட்டான் "
இந்த இரண்டும் அந்த படத்தில் குடும்ப கருவுடன் இணைத்திருக்கும் செய்தியையும் ஒரு நிமிடம் உணர்த்தும் . நீங்களும் உணர்வீர்கள் ...
இதில் ஆர்த்தி ,சிறீநாத் , மயில்சாமி என ஒரு நகைச்சுவைப்பட்டாளம் . தாம் தூம் , உன்னாலே உன்னாலே ,உள்ளம் கேட்க்குமே ஜீவாவின் பிடித்த நகைச்சுவையாளர் ஸ்ரீநாத் முதல் பாதியில் நகைச்சுவையில் சந்தானம் போல வார்த்தையால் கலக்கியிருப்பார் .வித்தியாசமான மொழிநடையும் கூட .
இதில் இடைவேளைக்கு பின் விவேக்கினுடைய பங்கு மிகத்தாராளம். இதில் கூடுதலாக பேசாமலேயே முக பாவனைகளில் நகைச்சுவையை அமைத்திருப்பார் . அவர் பொய்யாக கூறும் பாத்திரங்கள் அனைத்தும் நிஜமாகவே நடைபெறும் . படத்தை பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள் .
விஜய் அண்டனியின் இசைக்குரிய சிறப்பில் உசுமலஅரசே என்ற பாடல் ரசிக்க கூடியது . பேசப்பட கூடிய பின்னணி இசை இல்லாவிட்டாலும் சாதாரண குடும்ப காட்ச்சிகளுக்கு வரும் பின்னணி இசை தான் .
ஆக மொத்தம் உத்தம புத்திரன் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ ஒரு நிறைவான படம் . சில உறவுகள் பற்றிய உணர்வுகளை நகைச்சுவை உணர்வோடு சுமந்தது ..
படத்தை நிறைவா போய் பாருங்க ...
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
THIRAI VIMARSANAM
0 comments